பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக செயல்பட்டதாக சிவசங்கர் பாபாவின் சீடரான சுஷ்மிதாவையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா நடத்தி வந்த தனியார்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்த தீபா வெங்கட்ராமன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘‘கடந்த 2014-ம் ஆண்டு முதல் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் எனக்கு எதிராக முன்னாள் மாணவிகள் சிலர் அளித்த புகாரில் சிபிசிஐடி போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எனக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்" என அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
23 mins ago
இந்தியா
43 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago