ஆனைமலை அருகே உள்ள சுந்தரபுரியில் ராஜாமணி என்ப வருக்கு சொந்தமான தோட்டத்து கிணறு உள்ளது. நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் 15 வயதுடைய பசுமாட்டை மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். அப்போது பசுமாடு எதிர்பாராத விதமாக சுமார் 20 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித் துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி மாட்டை கயிறு கட்டி, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
55 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago