புதுச்சேரிக்கு சென்ற மதுப்பிரியர்கள்118 பேர் மீது கடலூர் போலீஸார் வழக்கு :

By செய்திப்பிரிவு

கடலூர்: தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடலூர் மாவட்ட எல்லையான பெரியகங்கணாங் குப்பம், ஆல்பேட்டை, உண்ணாமலைசெட்டி, மருதாடு, வான்பாக்கம், மேல்பட்டம்பாக்கம் ஆகிய சோதனை சாவடிகளில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரிக்கும், கடலூருக்கு இடையே உள்ள ஆற்றுப்பகுதி வழியாக மதுபாட்டில்களை வாங்கி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுவிலக்கு போலீஸாருடன் ஆயுத படை போலீஸார் மாற்று வழியில் வருபவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் இதுவரை 118 பேர் மீது மது குடித்து வந்தது, மது பாட்டில்களை கடத்தி வந்தது என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்