தமிழகத்துக்கு மேலும் 2 ஆக்சிஜன் ரயில்கள் நேற்று வந்தன. இதுவரை இயக்கப்பட்ட 56 ஆக்சிஜன் ரயில்கள் மூலம் 3,800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கடந்த மே மாதம் 14-ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, சட்டீஸ்கரில் இருந்து வந்த 55-வது ஆக்சிஜன் ரயில் (85.96மெட்ரிக் டன்) திருச்சிக்கும், ஒடிசாவில் இருந்து வந்த 56-வது ஆக்சிஜன் ரயில் (85.8 மெட்ரிக் டன்) சென்னை துறைமுகத்துக்கும் நேற்று வந்தன.
இந்த ஆக்சிஜன், மாநில அரசின் சுகாதாரத் துறை மூலம் தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக விநியோகம் செய்யப்பட்டது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இதுவரையில் வந்த 56 ஆக்சிஜன் ரயில்கள் மூலம் மொத்தம் 3,800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்துள்ளது என தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago