திருப்பத்தூர்: வேலை வாய்ப்பு பதிவினை புதுப்பிக்காதவர்களுக்கு தமிழக அரசு சலுகை வழங்கியுள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக தமிழக அரசு சிறப்பு சலுகை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.5.2021 முதல் 3 மாதங்களுக்குள் அதாவது 27.8.2021-க்குள் இணையதளம் மூலம் தங்களது பதிவினைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.
இணையதளம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பத்தூர் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
இணையதளம் மூலம் புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையினர் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 27.8.2021-ம் தேதி வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம்’’. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
10 hours ago