நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் : கரோனாவுக்கு 19,386 பேர் சிகிச்சை :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்: திருநெல்வேலி மாவட்டத்தில் 202 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன் கரோனா பாதிப்பு 800-க்கும் அதிகமாக இருந்தது. தற்போது 3,662 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 230 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 274 பேர் குணமடைந்தனர். தற்போது 3,268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று 482 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 12 பேர் மரணமடைந்தனர். 6,487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 326 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 575 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 5,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவுக்கு நேற்று 6 பேர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

வணிகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்