வாணியம்பாடி: வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மதுவிலக்கு காவல் துறையினர் நடத்திய சோதனையில் சாராயம் மற்றும் வெளிமாநில மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த 4 பேரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில், வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை, உதயேந்திரம், ஜாப்ராபாத், ஆலங்காயம் மற்றும் நகர் பகுதிகளில் மதுவிலக்கு தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி மற்றும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அழிஞ்சிகுளம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதேபகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் (35) என்பவர் கர்நாடகா மாநில மதுபான பாட்டில்களை வாணியம்பாடியில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்து 80 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, திம்மாம்பேட்டை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, அதேபகுதியைச் சேர்ந்த சேகர் (63), அருண்குமார் (26) மற்றும் உதயசீலன் (37) ஆகிய 3 பேரும் சாராயம் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து தலா 120 லிட்டர் பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
13 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
சுற்றுலா
6 hours ago