சாராய விற்பனையை தடுக்கக் கோரியும், சாராய வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட் றாம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட ஆத்தூர்குப்பம் ஊராட்சி அலுவல கம் முன்பாக கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் சாராய வியாபாரிகள் வெளியில் இருந்து எங்கள் கிராமத்துக்கு உட்பட்ட பி-மோட்டூர் தென்னந்தோப்பில் குடில் அமைத்து அங்கு இரவு, பகல் பாராமல் பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்து வருகின்றனர்.
சாராயம் விற்பனையை அறிந்த வெளியூர்களை சேர்ந்த ஏராளமான மதுப்பிரியர்கள் தினசரி எங்கள் கிராமத்துக்குள் வந்து செல்கின்றனர். மதுபோதையில் தென்னந்தோப்பிலேயே விழுந்து கிடக்கின்றனர். இதனால், விவசாய வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால் எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களும் மதுப்பழக் கத்துக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது. இதை தடுக்க வேண்டும், சாராய விற்பனையை ஒழிக்க வேண்டும் என நாட்றாம்பள்ளி காவல் நிலையம், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவோர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த, வருவாய் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், சாராயவிற்பனையில் ஈடுபடுவோர் அடை யாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை யினர் உறுதியளித்தனர். அதன் பேரில், பொதுமக்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
வர்த்தக உலகம்
23 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
உலகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago