புதுச்சேரியில் இதுவரை கரோனா நோய் தொற்றின் காரணமாக 1,629 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், மே மாதத்தில் மட்டும் 812 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஓராண்டு கால இறப்புக்கு இணையாக புதுச்சேரியில் மே மாதம் இறப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதே நேரத்தில் குணமடைவோர் சதவீதம் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குறைகிறது.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் கடந்தாண்டு கரோனா தொற்று பரவிய போது உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தன. குறிப்பாக கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வரையில் 683 பேர் உயிரிழந்திருந்தனர்.
தேர்தலுக்குப் பிறகு கரோனா தொற்றின் பரவல் வேகம் அதிகரித்தது. ஏப்ரல் மாதம் மட்டும் 122 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து மே மாதம் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரும், அதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் புதுச்சேரியில் புதிய உச்சத்தை அடைந்தது. மே1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரையிலான இம்மாதத்தில் புதுச்சேரியில் 812 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த மே மாதத்தில் இறந்தோரின் எண்ணிக்கையானது, கடந்த ஓராண்டு கால இறப்புக்கு இணை யாக உள்ளது.
புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் கரோனாவால் நேற்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களைச் சேர்த்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது. இங்குள்ள நான்கு பிராந்தியங்களில் புதுச்சேரி யில் 1,327 பேர், காரைக்காலில் 207 பேர், ஏனாமில் 69 பேர், மாஹேயில் 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது
புதுச்சேரியில் இறப்பு எண்ணிக்கை குறையாவிட்டாலும், பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை பரிசோதனைகள் செய்யப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. நேற்று 7 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடந்ததில், புதிதாக 627 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகா தாரத் துறை தெரிவிக்கிறது. ஆயிரத்துக்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது கடந்த சில நாட்களாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிகிச்சையில் இருந்த 1,629 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் சதவீதம் 87.8 ஆக உயர்ந்துள்ளது.முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
10 mins ago
இணைப்பிதழ்கள்
21 mins ago
தமிழகம்
32 mins ago
சினிமா
50 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago