கோவை மத்திய சிறையில் கடந்த சில வாரங்களில் மட்டும் ஏறத்தாழ 10 சிறைக்காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், சிறைக்காவலர்கள் சிலர் நடத்திய, கிடாவெட்டு நிகழ்ச்சியின் மூலம் தொற்று பரவியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் கூறும்போது, ‘‘சிறையில் இருந்து வெளியே, விடுமுறையில் செல்லும் காவலர்கள், கரோனா பரிசோதனை செய்து, அதில் ‘நெகட்டிவ்’ என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல, சிறைக்காவலர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானதற்கு, கிடா வெட்டு விருந்து மட்டுமே காரணம் எனக்கூறுவது ஏற்புடையதல்ல. கடந்த ஏப்ரல் மாதம் கிடாவெட்டு நடந்தது. சில காவலர்க ளுக்கு தற்போதுதான் தொற்று உறுதியாகியுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
ஜோதிடம்
19 mins ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
உலகம்
3 hours ago