முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, தனது மாதச் சம்பளம் ரூ.10 ஆயிரத்து 101-ஐ வழங்கிய இரவுக் காவலரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கரோனா நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கும்படி முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தற்காலிக இரவுக் காவலராகப் பணியாற்றி வரும் மயிலாடுதுறையைச் சேர்ந்த தங்கதுரை (59), தனது ஒரு மாத சம்பளத்தை முதல்வரை நேரில் சந்தித்து வழங்க முயற்சித்தார்.
முதல்வர் அலுவல் பணி காரணமாக, அவரை நேரில் சந்தித்து வழங்க இயலாததால், ஒரு மாத சம்பளமான ரூ.10 ஆயிரத்து 101-ஐ அரசுக் கணக்கில் சேர்த்துள்ளார்.
இதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்கதுரையை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அத்துடன் அவருக்கு பரிசாக புத்தகம் வழங்கினார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தொழில்நுட்பம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago