வேலூர்: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் மினி லாரியில் கடத்திய தடை செய்யப்பட்ட குட்கா பார்சலை பறிமுதல் செய்து, இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வழியாக தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் கடத்தலை தடுக்க இரவு நேரத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மனோன்மணி தலைமையிலான காவலர்கள் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னை நோக்கிச் சென்ற மினி லாரி ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் பெட்டி பெட்டியாக இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக லாரியில் இருந்த பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடேசன் (28), சூர்யமூர்த்தி (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி பகுதியில் இருந்து சென்னைக்கு குட்கா பார்சலை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சுமார் ரூ.14 லட்சம் மதிப்பிலான மினி லாரியுடன் குட்கா பார்சல்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். குட்கா பார்சல் கடத்திய வழக்கில் வேறு நபர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 mins ago
சினிமா
51 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
14 hours ago