மோகனூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 4 பேர் கைது :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: மே தினம், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்தி மொத்தமாக மதுபான பாட்டில்களை சிலர் வாங்கி மோகனூர் பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இதன்பேரில் மோகனூர் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மோகனூர் காவிரி ஆற்றங்கரை சுடுகாடு அருகே செல்வகுமார், மேலப்பேட்டபாளையம் காவிரி ஆற்றின் அருகே முருகானந்தம், வள்ளியம்மன் கோயில் அருகே பிரகாஷ் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 231 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

4 mins ago

சினிமா

10 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

35 mins ago

ஓடிடி களம்

49 mins ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்