திருச்செங்கோட்டில் 15 பவுன் நகை திருட்டு :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: திருச்செங்கோட்டில் குளியலறையின் கண்ணாடியை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, 15 பவுன் நகையை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் நேற்று முன் தினம் வீட்டை பூட்டி விட்டு, தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, இவரது வீட்டின் குளியலறையின் வெண்டிலேட்டர் கண்ணாடிகளை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.8000 ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்