உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பிரிவு உபச்சார விழா :

By செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோருக்கு நேற்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.சத்தியநாராயணன் 2008-ல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2009-ல் நிரந்தர நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இதேபோல, நீதிபதி பி.ராஜமாணிக்கம் கடந்த 1991-ல் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2017-ல் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவர்கள் இருவரும் இம்மாதம் ஓய்வு பெற உள்ளனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இன்று (மே 1) முதல் கோடை விடுமுறை விடப்படுவதால் இருவருக்கும் நேற்று மாலை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில், சக நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரு நீதிபதிகளும் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளனர். நீதிபதி எம்.சத்தியநாராயணன் பணி ஓய்வுக்குப் பிறகு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்