கருத்து கணிப்பைவிட திமுக மகத்தான வெற்றி பெறும்: எம்எல்ஏ நம்பிக்கை :

By செய்திப்பிரிவு

ஒரு மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடப்பதால், அதன் முடிவுக்காக தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை ஒரு மாதத்துக்கு தள்ளிவைப்பது ஜனநாயக நடைமுறைக்கு உகந்ததல்ல. இந்நிலையிலும், பல்வேறு அசா தாரண சூழ்நிலைக்கு மத்தியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கட்சியினர் மிகக் கவனமாகப் பாதுகாத்து வருகின்றனர்.

கடந்த தேர்தலின்போது பதிவான வாக்குகளின் விவரங்கள் அடங்கிய படிவம் 17-சி, எண்ணி முடிக்கப்பட்ட வாக்குகளின் விவரம் அடங்கிய படிவம் 20 ஆகியவற்றில் வாக்குகளின் புள்ளிவிவரங்களில் வேறுபாடுகள் இருந்தன. இதில் தற்போது தவறு இருக்கக்கூடாது என்பதற்காக மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் என்ற முறையில் அந்த படிவங்களை தேர்தல் ஆணையத்திடம் வாங்கி வாக்குகள் பதிவாகி உள்ள விவரங்களை சரிபார்க்க நடவடிக்கை எடுத்துள்ளேன். கருத்துக் கணிப்பையும் கடந்து திமுக மகத்தான வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

க்ரைம்

33 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

மேலும்