திருச்சி: ரம்ஜான் பண்டிகை முடியும் வரை பெரிய அளவிலான ஜவுளி கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமக்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து குடிமக்கள் மன்றத்தின் தலைவர் எம்.சேகரன், தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகைக்கு புத்தாடைகள் அணிந்து கொண்டாடுவது வழக்கம். தற்போது, கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால், 3,000 சதுரடி பரப்பளவுக்கு மேல் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், சிறு கடைகளில் அதிக அளவில் கூட்டமாக நின்று ஆடைகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, ரம்ஜான் பண்டிகை முடியும் வரை 3,000 சதுரடி பரப்பளவுக்கு மேல் உள்ள ஜவுளி கடைகளை திறந்து, சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் உத்தரவுகளை முழுமையாக கடைபிடித்து வியாபாரம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
4 mins ago
தமிழகம்
15 mins ago
சினிமா
33 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
52 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago