கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 431 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 200 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 200 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 27,828 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று47 பேர் உட்பட 26,099 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 966 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்தது உட்படஇதுவரை 305 பேர் உயிரிழந் துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 16,591 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 53 பேர் உட்பட 15,821 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட் டத்தில் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 11,554 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று வரை 10,999 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்