கோவையில் ரயில் மீது கல்வீச்சு :

By செய்திப்பிரிவு

கோவை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மதியம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ரயில் பீீளமேடு ரயில் நிலையம் அருகே சென்ற போது, தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர், கற்களை எடுத்து ரயில் மீது வீசினர். இதில் அந்த எக்ஸ்பிரஸ் ரயிலின், ஒரு ஏசி பெட்டியில் கண்ணாடி உடைந்தது. அந்த பெட்டியில் இருந்த பயணிகள் திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்தனர். கல்வீச்சில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் கோவை ரயில்வே போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார், கல்வீசிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், ரயில் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

க்ரைம்

13 mins ago

வணிகம்

17 mins ago

சினிமா

14 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

உலகம்

36 mins ago

வணிகம்

42 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்