வழிப்பறி சம்பவத்தில் : 3 பேர் கைது :

By செய்திப்பிரிவு

சென்னை, அரும்பாக்கம், ஜெய்நகர், 6-வது தெருவைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் டிபன் கடையில் இருந்த போது, அங்கு வந்த 3 நபர்கள், சுகுமாரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்துசிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கண்காணிப்புகேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், சுகுமாரிடம் பணம்பறித்து தப்பியது அயனாவரத்தைச் சேர்ந்த அஸ்வின், அவரது கூட்டாளிகள் அம்பத்தூர், நேரு நகரைச் சேர்ந்த கிருஷ்ணா, புழல்எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரை கைதுசெய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட அஸ்வின் மீது ஆந்திர மாநிலம், கூடூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்