கோவையில் நேற்று ஒரே நாளில் 427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகரில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை, 17 தனியார் மருத்துவமனைகள், மத்தம்பாளையத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையம் ஆகிய இடங்களில் கரோனா பாதித்த 2,171 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், நேற்று 427 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறும்போது, “மாவட்டம் முழுவதும் 5,050 பேருக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்றுவந்தவர்களில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 2.27 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் சிகிச்சை பெற ஏதுவாக 4,827 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 22 இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago