கோவையில் நேற்று ஒரே நாளில் 427 பேருக்கு கரோனா பாதிப்பு :

By செய்திப்பிரிவு

கோவையில் நேற்று ஒரே நாளில் 427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகரில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை, 17 தனியார் மருத்துவமனைகள், மத்தம்பாளையத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையம் ஆகிய இடங்களில் கரோனா பாதித்த 2,171 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், நேற்று 427 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறும்போது, “மாவட்டம் முழுவதும் 5,050 பேருக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்றுவந்தவர்களில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 2.27 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் சிகிச்சை பெற ஏதுவாக 4,827 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 22 இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்