திருச்சி ஜங்ஷன்-பாலக்காடு டவுன் ரயில் இயக்கத்தில் மாற்றம் :

By செய்திப்பிரிவு

சேலம்: ஈரோடு வழியாக இயங்கும் திருச்சி ஜங்ஷன் பாலக்காடு டவுன் சிறப்பு ரயில் நாளை (10-ம் தேதி) ஒரு நாள் இரு மார்க்கத்திலும் ஈரோடு-பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

திருச்சி ஜங்ஷன்-பாலக்காடு இடையே இரு மார்க்கத்திலும் ஈரோடு வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு- சாவடிபாளையம் இடையிலான ரயில் பாதையில், ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், திருச்சி ஜங்ஷன்-பாலக்காடு டவுன் சிறப்பு ரயில் (எண்06843) இயக்கம், திருச்சி முதல் ஈரோடு வரை நாளை (10-ம் தேதி) ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு ஜங்ஷனில் இருந்து பாலக்காடு டவுன் வரை மட்டுமே இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் பாலக்காடு டவுன்-திருச்சி ஜங்ஷன் ரயில் (எண் 06844) இயக்கம், நாளை ஒருநாள் மட்டும் ஈரோடு முதல் திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காடு டவுன்- ஈரோடு ஜங்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

வணிகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்