புதுச்சேரி அரசு ஊழியர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 ரவுடிகளை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். அரசு ஊழியரான இவர். முன்னாள் எம்எல்ஏ லட்சுமி நாராயணனின் ஆதரவாளர் ஆவார். இவர் சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வாழைக்குளம் பைப் அரவிந்த் (எ) அரவிந்த் (32), வெங்கடேசன் (28), வைத்திக்குப்பம் கட்ட செந்தில் (எ) முனீஸ்வரன் (30) உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கணேசன் கொலை வழக்கில் சிறையில் உள்ள அரவிந்த், வெங்கடேசன், கட்ட செந்தில் ஆகிய மூவரும் பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, காவல்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் ஒப்புதல் அளித்த நிலையில், நேற்று அரவிந்த், வெங்கடேசன், கட்ட செந்தில் ஆகிய மூவரையும் போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
தமிழகம்
10 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
44 mins ago
விளையாட்டு
36 mins ago
இந்தியா
44 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago