மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா குறித்து தவறான தகவல் வெளியிட்டால் நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பசலி 1430 (2021-ம் ஆண்டு) சித்திரைத் திருவிழா நடத்தப்படவுள்ள விவரங்களுக்கான நிகழ்ச்சி நிரல்கள் பத்திரிக்கைகள் வழியாக கோயில் நிர்வாகத்தின் மூலமே வெளியிடப்படும். தற்போது ஹலோ மதுரை என்ற யூ-டியூப் சேனலில் வரும் சித்திரைத் திருவிழா தொடர்பான தவறான தகவலுடனும், எழுத்துப் பிழையுடனும் கூடிய நிகழ்ச்சி நிரல் விவரம் கோயில் நிர்வாகத்திலிருந்து வெளியிடப்பட்டதல்ல என்ற விவரம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல்கள் என தனியார் நிறுவனங்கள் யூ டியூப் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் செய்திகள் எதுவும் வெளியிட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோயில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்