நல்லாட்சியை மக்கள்தான் உருவாக்க வேண்டும் : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து

By செய்திப்பிரிவு

நல்லாட்சியை மக்கள்தான் உருவாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் நேற்று காலை வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாக்குபதிவு இயந்திரங்களை கண்டுப்பிடித்த நாடுகளே இதை கைவிட்டுள்ளன. அதை தயாரித்து கொடுக்கும் ஜப்பான்கூட கைவிட்டுவிட்டது. நைஜீரியா, இந்தியா நாடுகள் மட்டும்தான் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றன. இதில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதனால், வாக்குசீட்டு முறைக்கு வர வேண்டும்என்று கூறி வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

வாக்குபதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் எதற்காக நீண்ட நாள் இடைவெளி விட வேண்டும். நீண்ட இடைவெளி இருப்பது சந்தேகத்தை அளிக்கிறது. என்னமோ நடக்கிறது. வாக்குக்கு பணம்வாங்க மாட்டேன் என்று ஒவ்வொரு குடிமகனும் பெயரளவுக்கு கூறினால் போதாது. மாற்றம் நம் ஒவ்வொருவரிடம் இருந்தும் வர வேண்டும்.

நல்லாட்சி வர வேண்டும் என்றால் அதனை நாம் தான்உருவாக்க வேண்டும். மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின்மனதில் புரட்சி வர வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

உலகம்

7 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்