வாக்காளர்களுக்கு பணம் விநியோகப் புகார் ரூ.1 லட்சம் பறிமுதல்; அதிமுக பிரமுகர் கைது :

By செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் ஒரு வீட்டில் பறக்கும்படையினர் சோதனை நடத்தி ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரத்தை பறிமுதல் செய்து, அதிமுக பிரமுகரை கைது செய்தனர்.

சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சேலம் பெரிய கொல்லப்பட்டி எல்பி செட்டி தெருவைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி மாதேஸ்வரன் என்பவர் வீட்டில் பறக்கும் படை அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். சோதனையில், அவரது வீட்டில் இருந்த ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரம் மற்றும் 99 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில், கன்னங்குறிச்சி போலீஸார், மாதேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்