மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிம்மக்கல் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: விவசாயிகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாயை ஆதரித்து பசுமலையில் அவர் பேசியதாவது:
மத்திய அரசின் விவசாயச் சட்டங்கள் அமலானால் ரேஷன் கடைகள் இருக்காது. விலை கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு உணவுப்பொருட்களின் விலை உயரும். மேலும், பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை சட்டத்தால் 3, 5, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். தமிழக மக்களின் உரிமைகள் அனைத்தும் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
உலகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago