திருச்சியில் சில பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 61 முதல் 65-வது வார்டு பகுதிகளுக்கு இன்று ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 61 முதல் 65-வது வார்டு வரை யிலான பகுதிகளுக்கு மாநக ராட்சி மூலம் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஓயாமரி மயானம் அருகே நெடுஞ் சாலைத்துறை மூலம் தாங்கு சுவர் கட்டும் பணி மேற்கொள்ளும் போது மண் சரிவு ஏற்பட்டதால், அந்த இடத்தில் செல்லும் குடிநீர் உந்து குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. இதை சீர்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக இன்று குடிநீர் விநியோகம் இருக்காது. இந்தப் பணி முடிவடைந்தவுடன் ஏப்.2-ம் தேதி (நாளை) முதல் வழக்கம் போல குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

இதனால் ஏற்படும் சிரமங் களை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டு மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண் டும் என அவர் கேட்டுக் கொண் டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

7 mins ago

ஜோதிடம்

49 mins ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்