சேலம்: சேலத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தல் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, கடந்த 22-ம் தேதி இரவு சேலம் வந்தார். அவர் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்தார்.
நேற்று காலை கரூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, சேலம், எடப்பாடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க சேலம் வந்திருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று நேற்று காலை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.
அப்போது, தேர்தல் பணிகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக அதிமுக-வினர் தெரிவித்தனர். சந்திப்பு 15 நிமிடம் நடந்தது. அதன் பின்னர் முதல்வர் பழனிசாமி, கரூருக்கு புறப்பட்டுச் சென்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
இந்தியா
15 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
3 mins ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago