திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம் மன் திருக்கோயில் பொற்றாமரை குளத்தில் வரும் 26-ம் தேதி அப்பர் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
இது தொடர்பாக திருக்கோயில் செயல் அலுவலர் சா.ராமராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அப்பர் பெருமான் வாழ்வில் நடைபெற்ற தெப்ப வரலாற்றுக்கு இணங்க பாடல்பெற்ற சைவ சமயத் தலமான இக்கோயிலில் வரும் 26-ம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் சந்நிதி அருகில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து வரலாற்று தத்துவத்திலுள்ளவாறு திருத்தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
தமிழகம்
18 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
52 mins ago
விளையாட்டு
44 mins ago
இந்தியா
52 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago