திருமங்கலத்தில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு போலீஸார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருமங்கலம் அருகே ஒரே தெரு வில் அடுத்தடுத்த வீடுகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களால் அப்பகுதியினர் அச்சமடைந் துள்ளனர். போலீஸார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

திருமங்கலம் காமராஜர்புரம் ராகுல்நகரைச் சேர்ந்தவர் பானுப்பிரியா(28). கடந்த 20-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, அருகிலுள்ள தனது மற்றொரு வீட்டில் இரவில் தூங்கச் சென்றார். அடுத்தநாள் காலை வீட்டுக்கு வந்தபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 3 பவுன் நகை, வெள்ளி விளக்கு மற்றும் ரூ.5 ஆயிரம் திருடு போயிருந்தது.

அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (62). இவர் கடந்த 20-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, பேரையூரில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றார். அடுத்த நாள் வீட்டுக்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் திருடுபோயிருந்தது. திருமங்கலம் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் நடந்த திருட்டுச் சம்ப வங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வீடுகளைப் பூட்டிவிட்டு இரவு நேரத்தில் மட்டுமல்ல, பகல் நேரத்தில்கூட வெளியே செல்ல முடியாத நிலை இருக்கிறது. போலீஸார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

தமிழகம்

26 mins ago

க்ரைம்

33 mins ago

வணிகம்

37 mins ago

சினிமா

34 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

உலகம்

56 mins ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்