ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ஈஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் தக்காளி வியாபாரி ரவி (43). இவர், நேற்று முன்தினம் இரவு வியாபாரத்துக்காக சென்றார். அவரது மனைவி மகேஸ்வரி (39) மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவில் பின்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ.75 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றனர். நேற்று காலை 6 மணிக்கு எழுந்த மகேஸ்வரி வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை, பணம் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மகேஸ்வரி நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago