கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 93-வது வார்டு இடையர்பாளையம் ராம் காலனியில் ரூ.47 லட்சம் மதிப்பிலும், 92-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணசாமி நகரில் ரூ.64.90 லட்சம் மதிப்பிலும், 89-வது வார்டு சமீம் கார்டனில் ரூ.64.90 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்குகளை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, 91-வது வார்டு நேதாஜி நகரில் ரூ.74.90 லட்சம் மதிப்பிலும், சுகுணாபுரம் மேற்கு இட்டேரி வீதியில் ரூ.1.50 கோடியிலும் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள், 92-வது வார்டு சுகுணாபுரம் கிழக்கு ரெயின்போ காலனியில் ரூ.39.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடல் ஆகியவற்றையும் அமைச்சர் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையர் மதுராந்தகி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
25 mins ago
இந்தியா
19 mins ago
தமிழகம்
36 mins ago
வாழ்வியல்
27 mins ago
இந்தியா
41 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago