மதுரையில் சுமைத் தொழிலாளி, எஸ்.ஐ.யின் பூட்டியிருந்த வீடுகளில் 49 பவுன் திருட்டு

By செய்திப்பிரிவு

மதுரையில் சுமைத் தொழிலாளி வீட்டில் 44 பவுன் மற்றும் எஸ்.ஐ. வீட்டில் 5 பவுனை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை திருமங்கலம் அருகே சீத்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (43). சுமைத் தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி.

கடந்த 20-ம் தேதி சுந்தரராஜ் வேலைக்குச் சென்றிருந்தார். ஜெயலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு ஆடு மேய்க்கச் சென்றிருந்தார். மாலையில் வீடு திரும்பியபோது, பீரோவில் இருந்த 44 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் திருடுபோயிருந்தது. திருமங்கலம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை பெத்தானிபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஐ மணிமாறன். இவரது மகன், மகள் வெளியூரில் வசிக்கின்றனர். கடந்த 17-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மணிமாறனும், அவரது மனைவியும் உறவினர்களைப் பார்க்க அலங்காநல்லூருக்குச் சென்றனர். அடுத்த நாள் வீடு திரும்பியபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 5 பவுன், ரூ.6,500 திருடு போயிருந்தது. கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்