மதுரையில் பெண் அடித்துக் கொலை

By செய்திப்பிரிவு

பெருங்குடி சிவசக்தி நகரைச் சேர்ந்த முகமது கவுஸ் மனைவி காத்தூன் பீவி(55). அதே பகுதியில் உள்ள 13 சென்ட் இடத்தை பங்கீடு செய்வதில் இவருக்கும், இவரது சகோதர, சகோதரிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சகோதர, சகோதரிகள் காத்தூன் பீவி வீட்டுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த உறவினர்கள் காத்தூன் பீவியைத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த காத்தூன் பீவியை அவரது கணவர் முகமது கவுஸ் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இது தொடர்பாக காத்தூன் பீவியின் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பெருங்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

50 mins ago

உலகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்