கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தம்

By செய்திப்பிரிவு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, ஜனவரி 7-ம் தேதியில் இருந்து கீழ்பவானி இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், சில நாட்கள் இடைவெளியில் 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், கீழ்பவானி பாசனப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததாலும், அறுவடைப் பணிகள் பாதிப்பதாலும், பாசனத்துக்கு தற்போது நீர் திறக்க வேண்டாம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, 20-ம் தேதி காலை முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்