பாதுகாப்புத் துறை சார்பில் விநாடி - வினா போட்டி

By செய்திப்பிரிவு

வங்கதேச விடுதலைப் போர் கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்றது.

இப்போர் நடந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதை நினைவுகூரும் வகையில், குடியரசு தினத்தை முன்னிட்டும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில், ஆன்லைன் விநாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. கடந்த 11-ம் தேதி தொடங்கிய இப்போட்டி நாளையுடன் (ஜன.22) முடிவடைகிறது.

பொதுமக்களிடையே நாட்டுப் பற்றை வளர்க்கும் நோக்கில் நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், ஆறுதல் பரிசாக 7 பேருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

14 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களை https://quiz.mygov.in/quiz என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்