ரங்கம் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி

By செய்திப்பிரிவு

திருச்சி: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள 52 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. இதில், ரொக்கமாக ரூ.1,02,25,578 வரப் பெற்றிருந்தது. மேலும், 179 கிராம் தங்கம், 1,840 கிராம் வெள்ளி மற்றும் ஏராளமான வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.

கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) கே.பி.அசோக்குமார் முன்னிலையில், கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

ரங்கம் கோயிலில் மாதந்தோறும் உண்டியலில் ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை காணிக்கை கிடைக்கப் பெறும். அண்மையில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்றதால் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது.

இதனால், கடந்தாண்டைப் போலவே நிகழாண்டும் ரொக்க காணிக்கை வசூல் ரூ.1 கோடியைத் தாண்டியிருந்தது என கோயில் பணியாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்