விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முதல் திமுக சார்பில் மீண்டும் கிராமசபை கூட்டம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் நா.புகழேந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவுபடி, விழுப்புரம் திமுக மத்திய மாவட்டத்தில் 354 ஊராட்சிகளில் இதுவரை 170 ஊராட்சிகளில் மக்கள் கிராமசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கிற ஊராட்சிகளில் இன்று முதல் மக்கள் கிராமசபை கூட்டம் தொடர்ந்து நடத்தப்படும். கூட்டம் நடத்தும்போது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிகிறோம். திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும்.இதுவரை நடந்த மக்கள் கிராமசபை கூட்டங்களில் 1 லட்சம் பேர், “அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்” என்று கையெழுத்திட்டுள்ளனர். மீதமுள்ள ஊராட்சிகளில் நடைபெறும் கூட்டங்களிலும் சேர்த்து 2 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று கட்சி தலைமைக்கு அனுப்ப உள்ளோம் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 mins ago

சினிமா

21 mins ago

வாழ்வியல்

3 mins ago

தமிழகம்

39 mins ago

க்ரைம்

46 mins ago

வணிகம்

50 mins ago

சினிமா

47 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்