சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மரக்கடை மேம்பாலம் அருகே நேற்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1982 ஜன.19-ம் தேதி நடைபெற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் விவசாய தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவு நாளை தியாகிகள் நாளாக சிஐடியு கடைபிடித்து வருகிறது. இதன்படி, இந்த நினைவு நாளையொட்டியும் மற்றும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் நலச் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தங்கதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்