புதுக்கோட்டை புதுக்கோட்டை அருகே முள்ளூரில் தொடர் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து நேற்று ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மாவட்டத்தில் 2 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்களில், அண்மையில் பெய்த தொடர் மழையால் 1 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, ரபி பருவத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், உளுந்து போன்ற பயிர்களும் பரவலாக அதிகம் பாதிப்படைந்துள்ளன.
பயிர் பாதிப்பு குறித்து வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் மூலம் மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இப்பணியை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளின் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், அடங்கல் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் போன்றவற்றை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் கொடுக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், வேளாண் இணை இயக்குநர் ராம.சிவக்குமார், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
உலகம்
10 mins ago
ஆன்மிகம்
8 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
16 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
45 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago