வழக்கறிஞர்களுக்கும் கரோனா தடுப்பூசி வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி, வழக்கறிஞர்களுக்கும் போடப்பட வேண்டும் என தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிரபாகரன் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மத்திய,மாநில அரசுகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், ‘‘கரோனா தடுப்பு விதிகள் காரணமாக நீதிமன்றங்கள் பெரும்பாலும் காணொலிகாட்சி மூலமாகவே நடைபெற்று வருகிறது.விரைவில் இந்த சூழல் மாறி அனைத்து நீதிமன்றங்களும் முழுவீச்சில் செயல்படவுள்ளன. நீதிமன்றங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடங்கும்போது வழக்கறிஞர்களை பாதுகாக்கும் வகையில் கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும். எனவே அரசு அறிவித்துள்ள தடுப்பூசிக்கான அத்தியாவசியப் பணிகளுக்கான பட்டியலில் வழக்கறிஞர்களையும் சேர்த்து தடுப்பூசி போடப்பட வேண்டும். தவறினால் நீதிமன்றத்தை நாட நேரிடும்” என்று கோரியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்