பாலியல் கொடுமை வழக்கில் கைதான ஹேரன்பால் மீண்டும் சிறையில் அடைப்பு

By செய்திப்பிரிவு

இதற்கிடையே, இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம், பாபு, ஆச்சிப்பட்டி ஹேரேன்பால் ஆகியோருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கடந்த 5-ம் தேதி இரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், ஹேரேன்பாலை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 11-ம் தேதி சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் ஹேரேன்பாலிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து நேற்றுமுன்தினம் இரவு ஹேரன்பாலை மகளிர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய சிபிஐ அதிகாரிகள், அவரை மீண்டும் கோபி கிளைச் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

55 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்