கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில், ‘‘கோவை முதல் சத்தியமங்கலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அன்னூர் தாலுகாவுக்கு உட்பட்ட கோவில் பாளையம், குரும்பபாளையம் தொடங்கி, தேசிய நெடுஞ்சாலை களை தவிர்த்து, உட்புற கிராமங்கள், நூற்றுக் கணக்கான விவசாயநிலங்கள், கிணறுகள் ஆகிய வற்றை மையப்படுத்தி விரிவாக்கப் பணிகள் நடப்பதால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, விளை நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
விளையாட்டு
12 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
13 hours ago