மதுரையில் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் கடந்த டிச. 17 அதிகாலையில் முகமூடி அணிந்த 3 பேர் கும்பல் ஒரு வீட்டுக்குள் புகுந்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த தாய், மகளான 2 மூதாட்டிகளைத் தாக்கி கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளையும், செல்போன்களையும் பறித்துச் சென்றது.
இந்த வழக்கில் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவின்பேரில் குற்றப் பிரிவு துணை ஆணையர் பழனிக் குமார் தலைமையில் தனிப்படையினர் கொள் ளையர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காந்தி மியூசியம் சந்திப்பு அருகே சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்களுக்கு அவுட் போஸ்ட் கொள்ளையில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர்கள், மதுரை அருகே பூலாங் குளம் நாகராஜ் (39), சக்கிமங்கலம் அழகர் (43), கருப்பாயூரணி சீமான் நகர் கதிர்வேல் (34) எனத் தெரியவந்தது. அவர்களைக் கைதுசெய்த போலீஸார் அவர் களிடம் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
2 mins ago
தமிழகம்
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago
இந்தியா
2 hours ago