சேலம்: சேலத்தில் வீட்டில் பதுக்கிய 19 கிலோ குட்காவை போலீஸார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள குடோனில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக காவல் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சூரமங்கலம் போலீஸார் நேற்று காலை உழவர் சந்தை அருகே உள்ள ரங்கா நகர் பகுதியில் உள்ள தல்சாராம் என்பவரின் மளிகை கடையில் சோதனை நடத்தினர்.
மேலும், அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 மூட்டை குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5.70 லட்சமாகும். இதுதொடர்பாக தல்சாராமிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 mins ago
ஜோதிடம்
31 mins ago
தொழில்நுட்பம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago