கிணற்றில் ஆட்டோ ஓட்டுநர் உடல் மீட்பு

By செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முத்து (33). இவர், நேற்று முன்தினம் காலை சென்றார். அதன்பிறகு இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது மனைவி வேதவல்லி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் முத்துவை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை கருப்பனூர் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் முத்து உயிரிழந்து கிடப்பதாக பொதுமக்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் முத்துவின் உடலை மீட்டனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்து கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

வணிகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்