புதுச்சேரி காங்கிரஸ் பொதுச் செயலாளர் மீதான கொலை முயற்சி வழக்கில் போலீஸார் 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் வயல்வெளி பகுதியில் வசிப்பவர் ஏ.கே.டி.ஆறுமுகம். காங்கிரஸ் பொதுச் செயலாளரான இவரை கடந்த 19-ம் தேதி இரவு அங்குள்ள ரயில்வே கேட் அருகே 10-க்கும் மேற்பட்டோர் கும்பல் கற்கள், அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இதில் ஏ.கே.டி. ஆறு முகம் லேசான காங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை முயற்சி முன்விரோதம் காரணமாக நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக முதலியார்பேட்டை போலீஸார் 3 பேரையும், அதிரடிப்படை போலீஸார் 5 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
சினிமா
30 mins ago
வாழ்வியல்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago