காங். பிரமுகர் கொலை முயற்சி: 8 பேர் சிக்கினர்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி காங்கிரஸ் பொதுச் செயலாளர் மீதான கொலை முயற்சி வழக்கில் போலீஸார் 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் வயல்வெளி பகுதியில் வசிப்பவர் ஏ.கே.டி.ஆறுமுகம். காங்கிரஸ் பொதுச் செயலாளரான இவரை கடந்த 19-ம் தேதி இரவு அங்குள்ள ரயில்வே கேட் அருகே 10-க்கும் மேற்பட்டோர் கும்பல் கற்கள், அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இதில் ஏ.கே.டி. ஆறு முகம் லேசான காங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை முயற்சி முன்விரோதம் காரணமாக நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக முதலியார்பேட்டை போலீஸார் 3 பேரையும், அதிரடிப்படை போலீஸார் 5 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

சினிமா

30 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்