திருவண்ணாமலை: வந்தவாசி அருகே ஓட்டுநரை தாக்கி ஆட்டோவை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை பகுதியில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் மஸ்தான் (23). இவர், நேற்று முன்தினம் இரவு நகராட்சி அலுவலகம் அருகே காத்திருந்தபோது சவாரிக்காக காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் செல்ல வேண்டும் எனக் கூறி பயணம் செய்துள்ளனர். மங்கநல்லூர் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, மஸ்தானை கத்தியால் குத்தி, அவரை கீழே பிடித்து தள்ளி ஆட்டோவை கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்ற மஸ்தானை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
வணிகம்
35 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
59 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago