பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கொல்லப்பட்டி, கணக்கம்பட்டி, ஏரிப்பட்டி மற்றும் கொள்ளுப்பாளையம் கிராமங்களில் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, நடமாடும் ரேஷன் கடை தொடக்க விழா மற்றும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன், வட்டாட்சியர் தணிகைவேல், ஒன்றிய குழு உறுப்பினர் கொல்லப்பட்டி ஆர்.பிரபு மற்றும் கள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருவேங்கடம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் அமைச்சர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் பருவ மழையால் கால்நடைகளுக்கு நோய் தொற்றுகள் பரவாமல் தடுக்க கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்நடைகளின் மருத்துவ தேவைகளை அறிந்து சிகிச்சை மேற்கொள்ள அம்மா ஆம்புலன்ஸ்க்கு அழைத்தால் உடனடியாக சென்று சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
38 mins ago
தமிழகம்
7 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
5 hours ago